2ஜி ஊழல்: ரூ10,000 கோடி லஞ்சப் பணம் சென்னை நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு கடத்தல்– 'திடுக்' தகவல்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடைய நாட்டின் மிகப் பெரிய ஹவாலா நிதி மோசடியை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2ஜி முறைகேட்டில் தொடர்புடைய லஞ்சப் பணம் பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடியில் தனியார் வங்கி ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த சில தனியார் நிறுவனங்கள் அதற்கு பிரதிபலனாக, அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாவுக்கு லஞ்சம் வழங்கியதாகவும், இந்தப் பணம் ராசா சார்ந்த திமுக ஆதரவு கலைஞர் தொலைக்காட்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ரா உளவு அமைப்பு அறிக்கை
சர்வதேச உளவு விவகாரங்களை கவனிக்கும் இந்திய அமைப்பான "ரா' 2ஜி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2012-13 ஆண்டில் அறிக்கை அளித்தது. அதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த நிறுவனங்கள் அதற்கு பிரதிபலனாக துபாய், ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ள சில நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கான லஞ்சத்தை அளித்ததாகக் குறிப்பிட்டிருந்தது.

தனியார் கட்டுமான நிறுவனம்
இதற்கு சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் உதவியதாகக் கூறப்பட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி விசாரித்து வருகின்றனர். அகமதாபாத்தைச் சேர்ந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சூரத்தைச் சேர்ந்த வைர நிறுவனங்களின் ஹவாலா மோசடி குறித்து நடத்திய விசாரணையின்போது 2ஜி முறைகேட்டில் பெறப்பட்ட லஞ்சப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்றது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

வைர வியாபாரிகள் கைது
இந்நிலையில் அகமதாபாத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் அண்மையில் ஹவாலா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக அஃப்ரோஸ் ஃபட்டா, மதன் லால் ஜெயின், மணீஷ் ஷா, ராகேஷ் கோத்தாரி ஆகிய ஹவாலாவில் ஈடுபடும் நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

தேடுதல் வேட்டை
ஹவாலா மோசடியில் ஈடுபட்ட மன்சூக் லால் சங்வி, தீரஜ் ஜெயின் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இவர்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட பிருத்விராஜ் கோத்தாரி என்பவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நபர்கள் பிடிபட்டால் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வெளிநாடுகளில் ஹவாலா மோசடி நடந்துள்ளதை நிரூபிக்க முடியும் என்றும் பல்வேறு உண்மைகள் வெளி வரும் என்றும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications