ஒரு பெண் கூட நுழைய முடியவில்லை.. சபரிமலை நடை இன்று மூடப்படுகிறது
சபரிமலை கோயில் நடை இன்று இரவு மூடப்படுகிறது.
Recommended Video

சபரிமலை: கோர்ட் தீர்ப்பு வந்து இதுநாள்வரை ஒருநாள் கூட பெண்கள் கோயிலுக்குள் காலடி வைக்காத நிலையில் சபரிமலை நடை இன்று மூடப்படுகிறது.
சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அதிலும் கடந்த சில வாரங்களாகவே, இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் பதற்றம் நிறைந்த சூழலே காணப்பட்டு வருகிறது.

உச்சக்கட்ட பரபரப்பு
அதிலும் கடந்த வாரத்திலிருந்து இப்போது வரை உச்சக்கட்ட பரபரப்பே நீடிக்கிறது. கோயிலுக்குள் நுழைந்தே தீருவது என 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் படை கிளம்ப, அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்த.. பதற்றம் மேலும் தொத்திக் கொண்டது.

8 பெண்கள் முயன்றார்கள்
அனைத்து தடைகளையும் மீறி சபரிமலைக்கு இதுவரை 8 பெண்கள் நுழைய முற்பட்டார்கள். ஆனாலும் அவர்கள் யாரும் கடைசி வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

நடை மூடப்படுகிறது
இதனால் பெண்கள் மாறுவேடத்தில்கூட யாரும் கோயிலுக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் கோயில் நிர்வாகம் உறுதியாக உள்ளதால் பக்தர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி மாலை திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது, பரபரப்பான மிகவும் பதற்றமான சூழலில் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுழையவே இல்லை
இன்று இரவு 10 மணிக்கு நடை மூடப்படும் என்றும் மீண்டும் அடுத்த மாதம் மண்டல பூஜைக்காகத்தான் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நடை திறக்கப்பட்டு 5 நாள் ஆனாலும் ஒரு பெண் கூட கோயிலுக்குள் நுழையவே முடியாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications