சேலையால் வந்த பிரச்சனை.. தாலி கட்டும் முன்பு மணப்பெண்ணையே கொன்ற மணமகன்.. லிவ் இன் வேறயாமே
காந்தி நகர்: கடந்த ஒன்றரை ஆண்டுகள் வரை ஒருவரையொருவர் காதலித்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்த ஜோடி தங்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்தனர். தாலி கட்ட சில மணிநேரங்களே இருந்த நிலையில் சேலையால் வந்த பிரச்சனையில் டென்ஷனான மணமகன் இரும்பு குழாயை எடுத்து மணப்பெண்ணை தாக்கி கொடூரமாக கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் பாவ் நகரை சேர்ந்தவர் சோனி ராதோடு. இவருக்கு வயது 24. இவருக்கும் சஜன் பாரையா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. காதலிக்க தொடங்கினர். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கினர். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர்.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். தங்களின் குடும்பத்தினரிடம் கூறினர். இருவரின் குடும்பத்தினரும் ஓகே சொன்னதால் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதன்பிறகு சோனி - சஜன் ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
நேற்றைய தினம் சஜன் தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் மணப்பெண் சோனியின் வீட்டுக்கு வந்தார். அப்போது திடீரென்று அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதாவது திருமணத்துக்கு மணமகன் சஜன் குடும்பத்தினர் எடுத்து வந்த சேலை மற்றும் சில செலவுகள் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. திடீரென வாக்குவாதம் முற்றவே கோயமடைந்த சஜன், தனது வருங்கால மனைவி என்று கூட பாராமல் அருகே இருந்த இரும்பு குழாயை எடுத்து ஓங்கி சோனியின் தலையில் அடித்தார். அதுமட்டுமின்றி ஆத்திரம் அடங்காத சஜன், சோனியின் தலையை பிடித்து சுவற்றில் முட்டினார்.
இதில் சோனி தலையில் பலத்த காயமடைந்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். உடனடியாக அவர்கள் சோனியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சோனியின் உடல் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக மணப்பெண்ணை கொன்ற சஜன் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுபற்றி கங்கா ஜலியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள சஜனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் ஆர்ஆர் சிந்தால் கூறுகையில், ‛‛கங்கா ஜலியா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை நடந்துள்ளது. சோனியும், சஜனும் காதலித்தனர். இருவரும் திருமணத்துக்கு முன்பாகவே ஒன்றாக வாழ்ந்தனர். அதன்பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் திருமணத்துக்கு முன்பாக காலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சோனி கொல்லப்பட்டுள்ளார். சஜன் தலைமறைவாக உள்ளார். விரைவில் கைது செய்வோர் '' என்றார்.
திருமணத்துக்கு ஒரு மணிநேரமே இருந்த நிலையில் சேலை தொடர்பான பிரச்சனையில் மணப்பெண்ணை, மணமகனை அடித்து கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதனால் காலையில் கலகலவென இருந்த திருமண வீடு மாலையில் பெரும் சோகமாக மாறிப்போனது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications