சசி, இளவரசி, சுதாகரன் உடனே பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு- பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவர்
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவோடு சேர்ந்து சொத்துக் குவித்து மாட்டிய இந்தக் கும்பலுக்கு நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்தார்.
இதை எதிர்த்து பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் இந்த 4 பேரும் தொடர்ந்த அப்பீல் வழக்கில் தப்புக் கணக்கு போட்டு அவர்களை விடுத்து கேவலப்பட்டார் நீதிபதி குமாரசாமி.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், மற்ற 3 பேரும் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்த மூன்று பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் அடைக்கப்படவுள்ளனர்.