சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம்.. விசாரிக்க உத்தரவு
சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரூ: சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். இதனால் கடந்த ஓராண்டாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தன. இது தொடர்பாக சிறையில் ஆய்வு நடத்தி டி.ஐ.ஜி. ரூபா அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவிடம் தாக்கல் செய்து இருந்தார்.

டிஐஜி ரூபா குற்றச்சாட்டு
இந்த அறிக்கை மீது அவர் நடவடிக்கை எடுக்காததால் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.

கர்நாடக அமைச்சர்
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும்
அப்போது சசிகலா சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது குறித்து தீவிரமாக விசாரிப்பது அவசியம் என அவர் கூறினார். சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுக்க முயன்ற புகார் பற்றி மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.

அறிக்கை தாக்கல் செய்யப்படும்
மேலும் விசாரணைக்கு கால அவகாசம் ஏதும் கொடுக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர் இதுகுறித்து விசாரித்து முடித்ததும் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
மகன் அறநிலைய அமைச்சர்.. ஆனாலும் சமையல் வேலை செய்யும் தாய் - பூசாரி பணியில் தந்தை.. ரமேஷின் பின்னணி -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications