லஞ்சம், சிறை விதிமுறை மீறல்.. சசிகலா மீது பாய்கிறது புது வழக்குகள்?
பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறை விதிகளை வளைத்ததற்காக சசிகலா மீது கூடுதலாகக வழக்கு தொடரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைத்துறை டிஐஜியான ரூபா, கர்நாடக டிஜிபி ஆர்.கே.தத்தாவுக்கு, சிறைத்துறை டிஜிபி ஹெச்.எஸ்.சத்யநாராயண ராவ் மற்றும் சிறை அதிகாரிகள் குறித்து குற்றம்சாட்டி எழுதியுள்ள அறிக்கை வடிவிலான 4பக்க கடிதத்தில்தான் இந்த தகவல்கள் உள்ளன.

போலீசார் நாடகம்
ஏற்கனவே, சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல், சசிகலா அளவுக்கு அதிகமான நபர்களை சிறையில் சந்திக்க விதிமுறைகளை வளைத்து அதிகாரிகள் சலுகை காட்டுவதாக செய்தி வெளியானது. செய்தி வெளியான பிறகு அதில் கொஞ்சம் கெடுபிடி காட்டுவதை போல காட்டிக்கொண்டனர் போலீசார். ஆனால், உள்ளுக்குள் இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது இப்போது அம்லமாகியுள்ளது.

முக்கிய புள்ளி
இதற்கெல்லாம் கர்நாடகாவை சேர்ந்த சசிகலா விசுவாசி ஒருவர்தான் ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நபருக்கு கர்நாடகாவிலுள்ள போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் நன்கு பழக்கம். எனவே சசிகலா தரப்பில் பணத்தை பெற்று, அதிகாரிகளுக்கு வினியோகம் செய்து அவர்களை சரிகட்டும் வேலையில் அந்த புள்ளி ஈடுபட்டுள்ளார்.

சமாளிப்பு
பத்திரிகை செய்தி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என சப்பைகட்டு கட்டி சமாளித்த கர்நாடக அரசு, டிஐஜி அறிக்கைக்கு பிறகாவது உறுதியான நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வழக்கு
மேலும், சசிகலா மீது சிறை விதிகளை வளைத்தது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரப்படுமா, அல்லது கண்டுகொள்ளாமல் வளைந்து கொடுப்பார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications