காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும்.. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் இவைதான்!
காவிரி மேலாண்மைவாரியம்தான் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய திருத்தங்களை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காவிரி மேலாண்மை வாரியம்- உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் இவைதான்!- வீடியோ
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட திருத்தங்களை வரைவுத் திட்டத்தில் சேர்க்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திடீரென அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது,

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக வரைவுத் திட்டத்தை 4 மாத தாமதத்துக்குப் பின் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த வரைவுத் திட்டம் தொடர்பான இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள்:
- காவிரி நதிநீர் பங்கீட்டை தீர்மானிப்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே.
- நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மட்டுமே முழு அதிகாரம்.
- கர்நாடகா நீர் தராவிட்டால் மத்திய அரசிடம் முறையிடலாம் என்கிற பிரிவை வரைவு திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்
- கர்நாடகா நீர் தராதபோது மேலாண்மை வாரியத்திடம் முறையிடலாம்.
- தமிழகம், கர்நாடகா, கேரளா புதுவை புதிய அணைகளைக் கட்டக் கூடாது
- காவிரி மேலாண்மை வாரியத்தை பெங்களூருவில் அமைக்கக் கூடாது; டெல்லியில்தான் இருக்க வேண்டும்
- மாநிலத்தில் புதிய அரசு அமையாததால் ஜூலை மாதத்துக்கு வழக்கை ஒத்திவைக்க கோரும் கர்நாடகாவின் கோரிக்கை நிராகரிப்பு
- முன்னாள் நீதிபதி தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு
- மேலாண்மை வாரியத்துக்கு கூடுதல் அதிகாரங்களைத் தரும் வகையில் வரைவு திட்டத்தை மத்திய அரசு திருத்த வேண்டும்.
- திருத்தப்பட்ட காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான மேலாண்மை வாரிய வரைவு திட்ட அறிக்கைய நாளையே தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications