For Daily Alerts
Just In
பலாத்கார வழக்கு: ஐவரின் தூக்கு ரத்தை எதிர்த்து பொதுநல வழக்கு- சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!!
டெல்லி: சிறுமி பலாத்கார வழக்கில் 5 பேரின் தூக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் பதவி வகித்த காலத்தில் 35 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதில் மிகக் கொடூரமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரும் அடங்குவர்.
ஜனாதிபதியின் இந்த முடிவை எதிர்த்து பத்திரிகையாளர் பிங்கி விரானி பொதுநலன் வழக்கைத் தொடர்ந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
Comments
English summary
Former President Pratibha Patil's decision to commute death sentence of five condemned prisoners in child rape cases on Monday came under judicial scrutiny with the Supreme Court issuing notice to the Centre on a plea seeking to set aside the commutation.