ஜல்லிக்கட்டு: விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு சுப்ரீம்கோர்ட் தடை!
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததற்கு விளக்கம் கோரி விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
2014-ம் ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு கடந்த ஜனவரி 7-ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் நலவாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதனிடையே மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக நீதிமன்றம் சென்றதற்காக விலங்குகள் நல வாரியம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் விலங்குகள் நலவாரியத்துக்கு நோட்டீஸ்அனுப்பியது. மிருகவதை தடை சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்த வாரியம், மிருகங்கள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக வழக்கு தொடுத்தது. அரசுக்கு எதிராக இந்த நடவடிக்கை அமையவில்லை என்று பதில் அளித்தது.
மேலும் விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர் என்.ஜெயசிம்மா, உச்சநீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விசாரணையின் முடிவில் மத்திய அரசின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications