ஜல்லிக்கட்டு: விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு சுப்ரீம்கோர்ட் தடை!
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததற்கு விளக்கம் கோரி விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
2014-ம் ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு கடந்த ஜனவரி 7-ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் நலவாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதனிடையே மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக நீதிமன்றம் சென்றதற்காக விலங்குகள் நல வாரியம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் விலங்குகள் நலவாரியத்துக்கு நோட்டீஸ்அனுப்பியது. மிருகவதை தடை சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்த வாரியம், மிருகங்கள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக வழக்கு தொடுத்தது. அரசுக்கு எதிராக இந்த நடவடிக்கை அமையவில்லை என்று பதில் அளித்தது.
மேலும் விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர் என்.ஜெயசிம்மா, உச்சநீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விசாரணையின் முடிவில் மத்திய அரசின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய்












Click it and Unblock the Notifications