பாஜகவிற்கு இது சவுக்கடி.. நீதிமன்றம் மீது நம்பிக்கை கூடியுள்ளது.. காங்கிரஸ் மகிழ்ச்சி
அதிகாரத்தை தவறாக பயன்படுத்த நினைத்த பாஜகவிற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது, நீதிமன்றம் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்வனி குமார் பேட்டி
Recommended Video

டெல்லி: அதிகாரத்தை தவறாக பயன்படுத்த நினைத்த பாஜகவிற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது, நீதிமன்றம் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்வனி குமார் பேட்டி அளித்துள்ளார்.
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடந்து முடிந்துள்ளது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்தியது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கியமாக, இந்த பாஜக கட்சிதான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், எடியூரப்பா எந்த அடிப்படையில் ஆட்சி அமைத்தார் என்று நிரூபிக்க வேண்டும் என்றுள்ளனர்.
இந்த தீர்ப்பு குறித்து தற்போது காங்கிரஸ் கட்சி சந்தோஷமான மனநிலையில் பதில் அளித்துள்ளது. அதன்படி உச்ச நீதிமன்றம் நீதியை நிலைநாட்டிவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்வனி குமார் '' உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டி உள்ளது. இந்த தீர்ப்பை நாம் கொண்டாட வேண்டும். நீதிமன்றம் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இந்த தீர்ப்பு காப்பாற்றி இருக்கிறது. அரசியலில் பிரச்சனை செய்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்த நினைத்த பாஜகவிற்கு இது சவுக்கடி'' என்று அவர் கூறியுள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications