உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு... டேராடூனுக்கு விரைந்த ஆராய்ச்சியாளர்கள்
டேராடூன்: உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள டிஆர்டிஓ-வின் ஆராய்ச்சியாளர்கள் குழு தற்போது டேராடூனுக்கு விரைந்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்த தேவி பனிப்பாறைகளில் ஒரு பகுதி திடீரென்று நேற்று உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நதிகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப் பெருக்கால் தவுலிகங்கா நதியின் அருகிலுள்ள குடியிருப்புகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வெள்ள நீர் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடியதால் நிதியின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் விரைவு
இந்நிலையில், இந்த பனிப்பாறை வெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது, இதன் பாதிப்புகள் என்ன என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் உத்தரகண்ட் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிலுள்ள பனிச்சரிவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் குழு தற்போது டேராடூனுக்கு சென்றுள்ளனர்.

விரைவில் ஆய்வு தொடக்கம்
இது குறித்து உள் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "DRDO-SASE அமைப்பின் ஆராய்ச்சியாளர் குழு டேராடூனுக்கு சென்றுள்ளனர். அவர்கள் விரைவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்ட ஜோஷிமத் பகுதிக்குச் சென்று கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளைத் தொடங்கவுள்ளனர். இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்" என்றார்.

அடித்துச் செல்லப்பட்ட நீர்மின் நிலையம்
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக தபோவன் அணையின் குறுக்கே கட்டப்பட்டு வந்த விஷ்ணுகாட் நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார். மேலும், மாயமான 152 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

12 பேர் மீட்பு
மேலும், தற்போது தபோவன் பகுதியில் அமைந்துள்ள சுரங்கத்தில் 30 முதல் 35 பேர் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சுரங்கம் 250 மீட்டர் நீளமுடையது என்றும் இதில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சுரங்கத்தில் சிக்கியிருந்த 12 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications