அனுமதி மீறி வி.எச்.பி பேரணி! 'நு' மாவட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது போலீஸ்.. ஹரியானாவில் பதற்றம்
சண்டிகர்: மத கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 'நு' மாவட்டத்தில் இன்று 'ஷோபா யாத்திரை' மேற்கொள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள நு மாவட்டத்தில் கடந்த மாதம் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினர் பேரணியை நடத்தினர். இதனை அம்மாவட்ட பாஜக தலைவர்தான் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த பேரணியில் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல்தான் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இதில் 2 போலீசார் மற்றும் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த கலவரத்தையடுத்து 5 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்திருக்கிறது. வன்முறையின் ஒரு பகுதியாக செக்டார் 57ல் உள்ள அஞ்சுமான் ஜமா மசூதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது அந்த மசூதியில் இமாமாக பணியாற்றி வந்த 19 வயது ஹபீஸ் சாத் கொல்லப்பட்டுள்ளார். கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 120க்கும் அதிகமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் நடந்து ஒரு மாத காலம் ஆன நிலையில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், கலவரம் நடந்த 'நு' மாவட்டத்தில் இன்று மீண்டும் பேரணி நடத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அழைப்பு விடுத்திருக்கின்றனர். ஆனால் இந்த பேரணிக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்திருக்கிறது. இருப்பினும் பேரணி நடத்துவதில் விஷ்வ ஹிந்து பரிஷத் உறுதியாக இருக்கிறது. எனவே நு மாவட்டத்தில் போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 1,900 போலீசார் மற்றும் 24 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மொபைல் இன்டெர்நெட் சேவை மற்றும் பல்க் எஸ்எம்எஸ் அனுப்பும் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர சாலை போக்குவரத்திலும் சில மாற்றங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. நு மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல இன்று கல்வி நிலையங்கள் மற்றும் வங்கிகளும் மூடப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications