3 பேர்தான் ஜெயிச்சாங்க.. மத்தவங்க தோத்துட்டாங்க.. இருந்தாலும் "குமுதா" ஹேப்பிதான் அண்ணாச்சி!
டெல்லி: ஒவ்வொருத்தருக்கும் ஒரு பீலிங் என்பார்கள். அந்தக் கதைதான் டெல்லியில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
வெற்றி பெற்ற கட்சியைப் போலவே தோல்வி அடைந்த கட்சியினரும் கூட ஒருவகையில் ஹேப்பியாகவே உள்ளனர். எனக்கும் சியர்ஸ், உனக்கும் சியர்ஸ் என்பது போல படு ஜாலியான காட்சியாக மாறியுள்ளது டெல்லி தேர்தல் களம்.
இந்தத் தேர்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மூன்று பேர்தான். வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, தோல்வியுற்ற பாஜக மற்றும் காங்கிரஸ்.

தேர்தலில் வெற்றி, அதுவும் அமோக வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளனர்
பாஜகவினரும் கூட ஒரு வகையில் மகிழ்ச்சியில்தான் உள்ளனர். அவர்களது பரம வைரியான காங்கிரஸ் கூண்டோடு காலியாகி விட்டதே என்ற சந்தோஷம் அது. அந்த வகையில் குமுதா ஹேப்பிதான் அண்ணாச்சி!
காங்கிரஸ்காரர்களுக்கும் கூட ஹேப்பிதான். காரணம், பாஜவிகவி்னர் சிங்கிள் டிஜிட்டில் சுருண்டு போய் விட்டனர் என்ற சந்தோஷம் அது.
அதாவது சீரியஸான ஒரு சண்டை சிரிப்புக் காட்சியாக மாறுவது போல ஆகி விட்டது டெல்லி தேர்தல் களம். அமீத் ஷா தலைமையிலான பாஜகவினர் குழுவினர் ரூம் போட்டு, டிஸ்கஸ் செய்து, நீ அந்தப் பக்கம் போ, நீ இந்தப் பக்கம் போ.. நீ இங்கேயே இரு, நீ அங்கேயே இரு என்று உத்திகள் வகுத்து, வியூகம் வகுத்து, என்ன மாதிரி பிரசாரம் செய்யலாம் என்று சீரியஸாக யோசித்து சந்தித்த தேர்தலை ஜஸ்ட் லைக் தட் ஊதித் தள்ளி விட்டது ஆம் ஆத்மி.
அதாவது பாஜகவினர் உடலை வருத்தி வேலை பார்த்தார்கள் என்றால் (டெல்லி முழுக்க ஏகப்பட்ட போஸ்டர்களை ஒட்டித் தள்ளி விட்டனர்), ஆம் ஆத்மியினர் தம்மாத்தூண்டு மூளையை மட்டும் வருத்தி வேலை பார்த்தார்கள். அறிவுப்பூர்வமாக செயல்பட்டார்கள்.. இதனால் கோலியாத்தை வீழ்த்திய டேவிட் கதையாக மாறியுள்ளது டெல்லி!












Click it and Unblock the Notifications