பாஜக பெண் எம்பி நில அபகரிப்பு புகாருக்கு பதிலடி! மன்னர் ஷாஜஹான் பரம்பரை அவிழ்த்துவிட்ட "அந்தரங்கம்"
ஜெய்ப்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹால் இருக்கும் இடம் எங்கள் நிலம்; 400 ஆண்டுகளுக்கு முன்னர் முகாலய மன்னர் ஷாஜஹான் எங்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டார் என்று ஜெய்ப்பூர் இளவரசியும் பாஜக எம்.பி.யுமான தியா குமாரி தெரிவித்த புகார் இப்போது வேறு புதிய பஞ்சாயத்துகளை கிளப்பி விட்டிருக்கிறது.
தாஜ்மஹால், ஷாஜஹான் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டியல் காதல் மாளிகை. சுமார் 22 ஆண்டுகள், 22,000 தொழிலாளர்கள் உழைப்பின் உருவான பளிங்கு மாளிகை. அதனால்தான் இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் தாஜ்மஹாலை கண்டு ரசிக்க உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர்.

தாஜ்மஹால் வழக்கு
ஆனால் தாஜ்மஹால் குறித்து வலதுசாரி இந்துத்துவா சக்திகள் இடைவிடாமல் சர்ச்சையை கிளப்புவது வழக்கம். தாஜ்மஹால் கட்டப்பட்டதே ஒரு சிவன் கோவில் மீது என்பதுதான் வழக்கமான பிரசாரம். அண்மையில் இது தொடர்பாக ஒரு வழக்கையும் போட்டனர். அதில் தாஜ்மஹாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இந்து கடவுள் சிலைகள் இருக்கின்றன. அதனை திறக்க உத்தரவிட வேண்டும் என்பதுதான் வழக்கு. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மனுதாரரை வெளுவெளுவென வெளுத்துவிட்டது.

ஷாஜஹான் நில அபகரிப்பு
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்தவர் ஜெய்ப்பூர் இளவரசி என அழைத்துக் கொள்ளும் பாஜக எம்.பி. தியா குமாரி. இது தொடர்பாக தியாகுமாரி கூறுகையில், எங்கள் மூதாதையர் நிலத்தை ஷாஜஹான் ஆக்கிரமித்துக் கொண்டார். அந்த நிலத்தில்தான் தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து வருகிறோம் என கூறி பெரும் பரபரபபி ஏற்படுத்தினார்.
|
முகாலயர் பரம்பரை பதிலடி
ஆனால் இப்போது இந்த நில அபகரிப்பு புகார் போகும் திசையே வேறாகிவிட்டது. பாஜக பெண் எம்.பி. தியாகுமாரி, முகாலய அரசர் பரம்பரையை சேர்ந்த இளவரசர் HrH Prince Yakub Habeebuddin Tucy என்பவர் ஒரு வீடியோவை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: தியாகுமாரியின் உடம்பில் ஓடுவது ராஜபுத்திரர்களின் ரத்தம் என்றால் ஷாஜஹான் மீது நில அபகரிப்பு சொன்ன ஆவணங்களை வெளியிட வேண்டும். இப்படி எல்லாம் பேசுவது படு முட்டாள்தனமானது.

ராஜபுத்திர பாட்டிகள்
மன்னர் ஷாஜஹானின் தாத்தா அக்பரின் மனைவியரில் ஒருவர் ஜோதா பாய் என்ற ஹர்கா பாய், ராஜபுத்திரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஷாஜஹானின் 2-வது மனைவி பெயர் லால் பாய். அதாவது ராஜ்புத்திர குடும்பத்து மருமகன்தான் ஷாஜஹான். மருமகன் என்ற வகையில் ராஜபுத்திர குடும்பத்தினர் சீர்வரிசை அல்லது சீதனங்கள் கொடுத்திருக்கக் கூடும். அதையெல்லாம் நில அபகரிப்பு என்றெல்லாம் சொல்லக் கூடாது. மாமன்னர் அக்பர் காலத்தில் இருந்தே முகாலயர்களுடன் ராஜபுத்திரர்கள் கூட்டணி அமைத்து போரிட்டுள்ளனர். இவ்வளவு ஏன் என்னுடைய 27 பாட்டிகளில் 14 பேர் ராஜபுத்திரர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவ்வாறு HrH Prince Yakub Habeebuddin Tucy கூறினார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications