50 வயது மும்பை ‘சொர்ணாக்கா’... பேரு பேபி... தொழில் கஞ்சா, அபின், ஹெராயின் விற்பனை!
மும்பை: தொழில் கஞ்சா, அபின், ஹெராயின் விற்பனை.. சொத்து மதிப்பு ரூ. 100 கோடி. இதுதான் மும்பையைக் கலக்கி வரும் பெண் போதைப் பொருள் தாதா சசிகலா ரமேஷ் படாங்கரின் கலக்கல் கதை.
50 வயதாகும் சசிகலாவின் செல்லப் பெயர் பேபியாம். இவரது பெயரைக் கேட்டாலே மும்பை போதைப் பொருள் கும்பல்களுக்கு குஷிதான். கடந்த 15 வருடமாக சசிகலா கும்பலின் அட்டகாசம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. இந்த கும்பலை அடக்க முடியாமல் மும்பை போலீஸார் திணறி வருகின்றனர்.
ஆனால் சாதாரண சசிகலாவை மிகப் பெரிய தாதா ரேஞ்சுக்கு மாற்றக் காரணமே இந்த மும்பை போலீஸார்தான். அவர்களில் சிலர்தான் சசிகலா இந்த அளவுக்கு வளர முக்கியக் காரணம். அவர்கள்தான் சசிகலாவை உருவாக்கியவர்களும் கூட.

இன்று ரூ. 100 கோடி சொத்துடன் அசத்திக் கொண்டிருக்கிறார் சசிகலா. இவரைக் கைது செய்ய தற்போதுதான் மும்பை போலீஸார் சற்றே அக்கறை காட்டுகின்றனர். சமீபத்தில் சசிகலாவின் ரகசியக் கணவரான தர்மராஜ் கலோக்கே என்ற போலீஸ்காரரை கைது செய்தனர் போலீஸார். தற்போது சசிகலாவைத் தேடி வருகின்றனர்.
சசிகலாவின் கதை சுவாரஸ்யமானது. அவரது கணவரும், சகோதரரும் போதை அடிமை ஆவர். அவர்களுக்காக சசிகலா போதைப் பொருட்களைத் தேடிப் போய் கடைசியில் அதன் மார்க்கெட்டைப் பார்த்து போதைப் பொருள் விற்பனையில் குதித்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த போதைக் கும்பல்களிடம் இவர் போதைப் பொருட்களை வாங்குவார். அவர்களிடமிருந்து வாங்கி தனது வயிற்றில் வைத்து அவற்றைக் கட்டி சேலையால் மறைத்தபடி ரயில் மூலம் மும்பைக்குள் அவற்றைக் கொண்டு வருவார்.
இவர் மீது 2000 முதல் 2002 வரை 3 வழக்குகள் போடப்பட்டன. ஆனால் மூன்றிலும் வெளியே வந்து விட்டார். பின்னர் அவர் திடீரென போலீஸ் உளவாளியாக மாறினார்.
போதைப் பொருள் விற்பவர்கள் பலரை விவரமாக போலீஸாரிடம் மாட்டி விட்டார். இதற்காக அவர்களிடமிருந்து சில சலுகைகளைப் பெற்றார். கூடவே தனது தொழிலை பலப்படுத்திக் கொண்டார். இதற்கு மும்பை போலீஸார் பலர் உதவியாக இருந்துள்ளனர்.
இப்படியாக வளர்ந்து வந்த சசிகலா இன்று மிகப் பெரிய கோடீஸ்வரியாக உயர்ந்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 100 கோடி என்கிறார்கள். ஆனால் இவரைப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளது காவல்துறை.
ஒர்லி பகுதியில் இவருக்கு ரூ. 12 கோடி மதிப்பிலான அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடு உள்ளதாம். அதேபோல ஒயின் ஷாப் ஒன்றையும் வைத்துள்ளார். புனே, கோரேகான் பார்க் பகுதியில் பெரிய வீடு உள்ளதாம்.
மும்பையில் இப்போது டாக் ஆப் தி டவுன் சசிகலாவும், அவர் சேர்த்து சொத்துக்களும்தான்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications