இப்படியா பண்ணுவீங்க?.. டிவிட்டரில் சண்டை போட்டுக்கொண்ட சித்தராமையா, எடியூரப்பா!
கர்நாடக தேர்தலை முன்னிட்டு சித்தராமையாவும், எடியூரப்பாவும் டிவிட்டரில் சண்டை போட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

பெங்களூர்: குஜராத் தேர்தலுக்கு பின் தற்போது இந்தியா முழுக்க கர்நாடக தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் சித்தராமையா அரசு ஆட்சியை எப்படி எல்லாம் தக்க வைக்கலாம் என்று யோசித்து வருகிறது.
அதுபோல் பாஜக கட்சியும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. உத்தரப்பிரதேச தேர்தல் மாடலை இங்கே பயன்படுத்தி வருகிறது.
பசு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில் கர்நாடக தேர்தலை முன்னிட்டு சித்தராமையாவும், எடியூரப்பாவும் டிவிட்டரில் சண்டை போட்டு இருக்கிறார்கள்.

பெங்களூரில் மோடி
தேர்தலை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி பெங்களூர் வந்து இருந்தார். இதில் பேசிய மோடி கர்நாடகாவில் ஆளும்கட்சியால் ஏற்பட்டு இருக்கும் பல்வேறு பாதிப்புகள் குறித்து பேசினார். முக்கியமாக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எந்த அளவிற்கு ஊழல் செய்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
|
மோடிக்கு வரவேற்பு
கர்நாடகா வந்த மோடிக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா வரவேற்பு அளித்தார். அது குறித்து டிவிட்டரில் ''பிரதமர் மோடியை வளர்ச்சியிலும், முதலீட்டிலும், புதுமையிலும் இந்தியாவில் நம்பர் 1ஆக இருக்கும் மாநிலத்திற்கு வரவேற்கிறோம். வித்தியாசமான வளர்ச்சி திட்டங்கள் மூலம் இந்தியாவில் முதன்மையாக பல விஷயங்கள் செய்து உள்ளோம். கர்நாடகாவின் வெற்றி இந்தியாவை பெருமைப்படுத்தும் என்று நம்பிக்கை இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
|
சித்தராமையா பதில்
இதுகுறித்து முன்னாள் முதல்வரும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான எடியூரப்பா ''வரவேற்பிற்கு நன்றி. ஆமாம் கர்நாடகா பல விஷயங்களில் முதன்மையாக இருக்கிறது. ஊழல் மாநிலம், 3500க்கும் அதிகமான விவசாயிகள் மரணம், சட்ட ஒழுங்கு கேடு, அரசு ஊழியர்களின் மரணம், நல்ல ஊழியர்கள் இட மாற்றம், பெங்களூர் கட்டமைப்பில் ஏற்பட்டு இருக்கும் குளறுபடி என பல விஷயங்களில் முதன்மையாக இருக்கிறது'' என்று பதில் அளித்தார்.
|
மீண்டும் பதிலடி
இதற்கு சித்தராமையா பதில் அளித்துள்ளார் ''இதை இந்தியாவின் மிகப்பெரிய சுரங்க ஊழலை தனது ஆட்சியில் செய்தவர் குறிப்பிடுகிறார். கர்நாடகாவின் சுயாட்சியில் விருப்பம் இல்லாத ஒரு நபர் மட்டுமே இவ்வளவு வளர்ந்த ஒரு மாநிலத்தை ஊழல் மாநிலம் என்று குறிப்பிட முடியும்'' என்று பதில் அளித்து இருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications