சீக்கிய கலவர வழக்கு: டைட்லரை சிபிஐ காப்பாற்றுகிறது.. பிரதமருக்கு பிரபல வழக்கறிஞர் பரபரப்பு கடிதம்
டெல்லி: சீக்கியர் கலவரம் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் டைட்லரை சிபிஐதான் பாதுகாக்கிறது என்று மூத்த வழக்கறிஞர் ஹெச்.எஸ்.பூல்கா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1984ம் ஆண்டு சீக்கியர் கலவர வழக்கை திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்றும், ஜகதீஷ் டைட்லரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும், அந்த கடிதத்தில் பூல்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

டைட்லருக்கு எதிரான சாட்சியத்தின், வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யாத நிலையில், அவருக்கு ஆதரவான வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்தது. ஒருதலைபட்சமாக சிபிஐ நடந்து கொண்டது.
22 சாட்சியங்களின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை என கோர்ட் கேள்வி எழுப்பியபோது, அது அவர்களின் விருப்பம் என பதில் அளித்தது சிபிஐ. பகிரங்கமாகவே ஜகதீஷ் டைட்லருக்கு சிபிஐ ஆதரவு தெரிவித்தது அம்பலமாகியுள்ளது. ஜகதீஷ் டைட்லருக்கு எதிராக வழக்கு திரும்பிவிடும் என்ற அச்சத்தால், அபிஷேக் வர்மாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தாமல் சிபிஐ காலம் தாழ்த்தி வருகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் பிரதமராக பதவி வகித்தவருமான இந்திரா காந்தி, சீக்கிய இனத்தை சேர்ந்த தனது மெய்க்காப்பாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதால், சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆதரவாளர்கள் பெரும் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். டெல்லி, பஞ்சாப் என பல இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் முக்கியமாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்தான் ஜகதீஷ் டைட்லர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications