சீக்கிய கலவர வழக்கு: டைட்லரை சிபிஐ காப்பாற்றுகிறது.. பிரதமருக்கு பிரபல வழக்கறிஞர் பரபரப்பு கடிதம்
டெல்லி: சீக்கியர் கலவரம் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் டைட்லரை சிபிஐதான் பாதுகாக்கிறது என்று மூத்த வழக்கறிஞர் ஹெச்.எஸ்.பூல்கா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1984ம் ஆண்டு சீக்கியர் கலவர வழக்கை திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்றும், ஜகதீஷ் டைட்லரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும், அந்த கடிதத்தில் பூல்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

டைட்லருக்கு எதிரான சாட்சியத்தின், வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யாத நிலையில், அவருக்கு ஆதரவான வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்தது. ஒருதலைபட்சமாக சிபிஐ நடந்து கொண்டது.
22 சாட்சியங்களின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை என கோர்ட் கேள்வி எழுப்பியபோது, அது அவர்களின் விருப்பம் என பதில் அளித்தது சிபிஐ. பகிரங்கமாகவே ஜகதீஷ் டைட்லருக்கு சிபிஐ ஆதரவு தெரிவித்தது அம்பலமாகியுள்ளது. ஜகதீஷ் டைட்லருக்கு எதிராக வழக்கு திரும்பிவிடும் என்ற அச்சத்தால், அபிஷேக் வர்மாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தாமல் சிபிஐ காலம் தாழ்த்தி வருகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் பிரதமராக பதவி வகித்தவருமான இந்திரா காந்தி, சீக்கிய இனத்தை சேர்ந்த தனது மெய்க்காப்பாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதால், சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆதரவாளர்கள் பெரும் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். டெல்லி, பஞ்சாப் என பல இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் முக்கியமாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்தான் ஜகதீஷ் டைட்லர்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications