சாக்லெட் வாங்கிக் கொடுத்து 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. டெல்லியில் கொடுமை
டெல்லியில் 6 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.
டெல்லி: டெல்லியில் 6 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் காஷ்மீரி கேட் பகுதியில் வசித்து வரும் தம்பதியினருக்கு 6 வயது பெண் குழந்தை உள்ளது. அந்த குழுந்தை கடந்த புதன்கிழமை இரவு தொடர்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்த குழந்தையின் தாய் அங்குள்ள அருணா ஆசப் அலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுமியின் அந்தரங்கப் பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குழுந்தையின் தாய் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த குழந்தை, சிவா அங்கிள் அடித்துவிட்டார் என்று திரும்பத் திரும்ப கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் சிவா என்ற பெயர் கொண்ட 25 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது குற்றம் செய்த சிவா என்ற நபர், "நான்தான் சிறுமியை பலாத்காரம் செய்தேன்" என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து உடனே அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா, வீடில்லாமல் தெருவில் வசிக்கும் நபர் என்றும், ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்றும் தெரிய வந்தது. விசாரணையில், "சாக்லெட் வாங்கிக் கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications