பெற்ற தாயை, நாயுடன் தங்க வைத்து சோறு போட்ட மகன் - கர்நாடகத்தில் பரிதாபம்!
ஹாசன்: கர்நாடகாவில் பெற்ற தாயை, நாயுடன் சேர்த்து வைத்த பராமரித்த மகனால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சக்லேஷ்புரா தாலுகா, ஹலசுலிகே கிராமத்தை சேர்ந்தவர் தேவம்மா. இவர் கடந்த ஓராண்டு காலமாக வீட்டின் முன்புறம் நாய் இருக்கும் இடத்தில் அதனுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் தன்னார்வு தொண்டு அமைப்புக்கு தெரிய வந்தது.
அவர்கள் நேற்று அங்கு சென்றபோது, மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் நாய் இருக்கும் இடத்தில் மூதாட்டி கடும் குளிரில் நடுங்கி கொண்டிருந்ததை பார்த்தனர். நாயுடன் சேர்த்து அடைத்து வைக்கப்பட்ட மூதாட்டியை வெளியில் எடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக அவரது மகனிடம் கேட்டபோது, வயதாகிவிட்டதால் வீட்டில் அவருக்கு ஒதுக்கியுள்ள அறையில் தங்காமல் வெளியில் வருகிறார். மேலும் நிதானம் தவறி வீட்டிற்குள் மலம், சிறுநீர் கழிக்கிறார்.
இதனால் வீட்டில் துர் நாற்றம் ஏற்படுகிறது. எனது பிள்ளைகள் மிகவும் கவலைப்படுகிறார்கள். அதனால் வெளியில் நாய் உள்ள இடத்தில் விட்டுள்ளேன் என்றார். மிகவும் வசதியாக வாழும் மூதாட்டியின் மகன் பேசுவதை கேட்ட தன்னார்வு தொண்டு அமைப்பினர் இவருக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது என்று அமைதியாகி விட்டனர்.
இது குறித்து மூதாட்டி கூறியதாக தன்னார்வ தொண்டு அமைப்பினர், "மூதாட்டியின் கணவர் மூலம் கிடைத்த ரூபாய் 1 லட்சத்தை அவரது மகன் பறித்துக்கொண்டு மூதாட்டியை வீட்டுக்குவெளியே நாயுடன் தங்க வைத்துள்ளார். வயதான காலத்தில் எங்கும் செல்ல முடியாமல், வேறு வழியின்றி அவரும் நாயுடன் வசித்து வந்தார். நாய்க்கு தினமும் மூன்று வேளை சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் எனக்கு பழைய சாப்பாட்டை ஓரு வேளை தான் கொடுக்கிறார்கள்" என்று அவர் வேதனைப்பட்டதாக தெரிவித்தனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications