சர்வதேச யோகா தின விழா- புறக்கணிக்க சோனியா, ராகுல் முடிவு!!
டெல்லி: சர்வதேச யோகா தினத்தையொட்டி நாளை டெல்லியில் நடைபெறவுள்ள யோகா தின நிகழ்வை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
டெல்லி ராஜபாதையில் நாளை யோகா தின நிகழ்வில் பங்கேற்க மத்திய அரசு சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அந்நிகழ்வில் பங்கேற்பது குறித்து அறிய மூவரிடமும் சிறப்புப் பாதுகாப்புப் படை தலைமையக அதிகாரிகள் நேற்று தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது, நாளைய நிகழ்ச்சியில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று மூவர் தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் யோகா தின நிகழ்வை சோனியா, ராகுல் புறக்கணிப்பதால் அக்கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் அந்நிகழ்வில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.