சோனியா காந்தி நாளை காஷ்மீர் பயணம்: மெகபூபாவை சந்தித்து ஆறுதல் !
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் மறைவைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை காஷ்மீர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக பதவி வகித்து வந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் முப்தி முகமது சயீத் கடந்த இரு தினங்களுக்கு முன்னர உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி காஷ்மீர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இன்னும் சில தினங்களில் மெகபூபா முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை மெகபூபாவை சந்தித்து அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேனியா காந்தி டெல்லியில் இருந்து நாளை ஸ்ரீநகர் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், நாளை மாலை குப்கரில் மெகபூபாவை சந்திப்பார் என்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் குலாம் அகமது மிர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
முப்தி முகமது சயீத் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது சொந்த ஊரான பிஜ்பெஹராவுக்கு சோனியா செல்ல மாட்டார் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications