வை ராஜா வை... கிளப்புகளில் பணம் வைத்து "ரம்மி" விளையாட உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி: தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணம் வைத்து ரம்மி விளையாடுபவர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், ரம்மி விளையாட அனுமதி கோரியும், கிளப் உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று மாலை (அக்டோபர் 18) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் திறன் மேம்பாட்டிற்காகவே ரம்மி விளையாடப்படுவதாக கிளப் உரிமையாளர்கள் சார்பில் வாதம் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
ரம்மி ஆடுவது சூதாட்டத்தின் கீழ் வராது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரம்மி விளையாட்டை தவிர, வேறு ஏதாவது சட்டவிரோத சீட்டு விளையாட்டு விளையாடப்பட்டாலோ, அது தொடர்பான தகவல்கள் வந்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடையில்லை என்றும் அப்போது நீதிபதி தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications