ஆர்எஸ்எஸ் நிர்வாகி மாலையிட்ட அம்பேத்கர் சிலையை பால், கங்கை தண்ணீரால் சுத்தப்படுத்திய வக்கீல்கள்
மீரட்: உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், ஆர்எஸ்எஸ் நிர்வாகி மாலையிட்டு மரியாதை செய்த அம்பேத்கர் சிலையை வழக்கறிஞர்கள் கங்கை நதி மற்றும் பால் ஊற்றி சுத்தம் செய்தனர். அம்பேத்கர் சிலையை புனிதப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், தலித்துகளின் ஆதர்ஷ நாயகனாக உள்ள அம்பேத்கர் சிலைக்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகி ராகேஷ் சின்ஹா நேற்று மாலையிட்டதாகவும், எனவே, பாலும், கங்கை நதி தண்ணீரும் கொண்டு சிலையை புனிதப்படுத்தியதாகவும், மீரட் நகர தலித் சமூக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
Meerut: A group of Dalit lawyers 'purified' statue of Dr BR Ambedkar near Dist Court y'day, say "RSS' Rakesh Sinha came&garlanded the statue.BJP govt oppresses Dalits.They've nothing to do with Ambedkar but do this to promote BJP&allure Dalits. So we purified this with Gangajal." pic.twitter.com/cs8tnzZ3XE
— ANI UP (@ANINewsUP) August 11, 2018
பாஜகவுக்கும் அம்பேத்கருக்கும் சம்மந்தம் இல்லை என்று அந்த வழக்கறிஞர்கள் கோபம் வெளிப்படுத்தினர்.