வாத்தி, பாத்து பாஸாக்கி விடுங்க.. விடைத்தாளில் 500 ரூபாயை ஸ்டேப்லர் அடித்து வைத்த மாணவர்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் உள்ள பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் தன்னை பாஸாக்கிவிடுமாறு கூறி விடைத்தாளில் ரூ.500 ரொக்கத்தை ஸ்டேப்லர் அடித்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அண்மையில் தேர்வு நடைபெற்றது. விடைத்தாளை திருத்தும்போது ஒரு ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த விடைத்தாளில் ரூ. 500 பணத்தை ஸ்டேப்லர் அடித்து வைத்ததுடன் தன்னை பாஸாக்கிவிடுமாறு மாணவர் ஒருவர் எழுதியிருந்தார்.

இது குறித்து விடைத்தாள் திருத்திய ஆசிரியரான ரவி சின்ஹா கூறுகையில்,
விடைத்தாள்களை திருத்தும்போது மாணவர்கள் செய்யும் பல சேட்டைகளை பார்க்க வேண்டி உள்ளது. சிலர் குருஜி தயவு செய்து என்னை பாஸாக்கிவிடுங்கள், எனது தந்தைக்கு ரத்த புற்றுநோய் உள்ளது அதனால் என்னை பாஸாக்குங்கள், நான் மிகவும் ஏழை என்னை பாஸாக்கிவிடுங்கள் என்று விடைத்தாளில் எழுதியிருப்பார்கள். இந்நிலையில் தான் மாணவர் ஒருவர் தனக்கு பாஸ் மார்க் போடுமாறு கூறி விடைத்தாளில் ரூ.500 பணத்தை வைத்துள்ளார் என்றார்.
விடைத்தாள் திருத்தும் பணியின் ஒருங்கிணைப்பாளர் புபேந்திர சர்மா கூறுகையில்,
சில விடைத்தாள்களில் பணம் இருந்தது. மாணவர்கள் அவர்களின் வசதிக்கேற்ப பணத்தை வைத்துள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் அதற்கு எல்லாம் அசர மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications