பெங்களூர் போயிங் விமான நிறுவனத்தில் 180 என்ஜினியர்கள் திடீர் டிஸ்மிஸ்! சென்னை பணியாளர்கள் ஷாக்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் போயிங் விமான நிறுவனத்தில் 180 என்ஜினியர்கள் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது பணியாளர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட போயிங் விமான நிறுவனத்தின் பெங்களூர் பிரிவில் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. போயிங் நிறுவனம் சர்வதேச அளவில் எதிர்கொண்ட நெருக்கடியால் தற்போது ஒரே நேரத்தில் 180 என்ஜினியர்களை பணி நீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டது போயிங் விமான நிறுவனம். இந்த நிறுவனத்தில் சில உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யக் கூடியதாக பெங்களூர் பிரிவு செயல்பட்டு வருகிறது. சென்னையில் போயிங் விமான நிறுவனத்தின் டெக்னிக்கல் பிரிவு செயல்படுகிறது.

பெங்களூர் பிரிவில் போயிங் விமான நிறுவனம் பெருமளவு முதலீடு செய்திருந்தது. இந்த பிரிவின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.8,000 கோடி வருவாய் ஈட்டுகிறது போயிங் விமான நிறுவனம். போயிங் நிறுவனத்தில் மொத்தம் சுமார் 7,000 பேர் பணிபுரிகின்றனர்.
சர்வதேச அளவில் போயிங் விமான நிறுவனம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனத்தின் நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் ஆட்குறைப்பு பணி வெகுவேகமாக தொடங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பெங்களூர் பிரிவில் 180 என்ஜினியர்கள் ஒரே நேரத்தில் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமலேயே 180 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை வெடித்திருக்கிறது. பெங்களூர் நிறுவனத்தில் 180 என்ஜினியர்கள் ஒரே நேரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதால் சென்னை உள்ளிட்ட இதர அலுவலக பணியாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications