உணவகங்களே தண்ணீர் பாட்டில் விலையை நிர்ணயிக்கலாம்.. உச்சநீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் பாட்டில் விலையை உணவகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
டெல்லி: தண்ணீர் பாட்டில் விலையை உணவகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த உத்தரவு உணவகங்களுக்கு புதிய அதிகாரத்தை வழங்கி இருக்கிறது.
தற்போது அனைத்து இடங்களிலும் தண்ணீர் பாட்டில்கள் எம்ஆர்பி விலையில் விற்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் மட்டும் இதில் மாறுபாடுகள் இருக்கும். ஆனால் குளிர் பானங்கள் ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு மாதியாக விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தண்ணீர் பாட்டில்களின் விலை குறித்து உச்ச நீதிமன்றம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி நட்சத்திர விடுதிகள், உணவகங்களில் கூடுதல் விலையில் தண்ணீர் பாட்டில் விற்கலாம் என்று கூறியுள்ளது.
இதுபோன்ற செயலுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தண்ணீர் பாட்டில் விலையை உணவகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக ஹோட்டல்களிலும், தியேட்டர்களிலும் தண்ணீர் விலை அதிகம் ஆகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications