கடவுளின் பெயரை வர்த்தகப் பொருட்களில் பயன்படுத்த தடை விதிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி : கடவுள்களின் பெயரையும், படத்தையும் வர்த்தக நோக்கில் பயன்படுத்த தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான பொதுநலன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததது. அதில் லாப நோக்கிற்காக தொழிலதிபர்கள், தங்களது உற்பத்தி பொருட்களில் ஆண் , பெண் கடவுள்களின் படத்தை பயன்படுத்துகின்றனர். இது கடவுள்களை அவமரியாதை செய்வதாகும் இதனை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இறுதியில் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது...
உற்பத்தி பொருட்களில் கடவுள்களின் படம் பயன்படுத்துவது அவர்களின் நம்பிக்கை அதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவில் 33 ஆயிரம் ஆண், பெண் கடவுள்கள் பெண் தெய்வங்கள், தேவர்கள் உள்ளதாக கூறுகின்றனர். அதனை வணங்குவது அவரவர் உரிமை. கடவுளின் பெயரால் வியாபாரம் செய்யும் ஒருவர் அதில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார்
இது மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம். ஒரு வியாபாரி லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கடை வைத்தால் அதை எப்படி தடுக்க முடியும்?
அது அவரது மகள் பெயராகக் கூட இருக்கலாம். அதேபோல ஒருவரது கடையின் பெயர் பலகையிலும், அவரது தயாரிப்பு பொருளின் அட்டை மீதும் கடவுள் உருவத்தை பதிப்பதை தடுக்க முடியாது.
எனவே கடவுள் பெயரையும், படத்தையும் வியாபாரத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது
என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications