பாலியல் குற்றவாளி ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன்! ஆனாலும் சிறையிலிருந்து வெளியே வர முடியாது! ஏன் தெரியுமா
காந்திநகர்: சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சாமியார் ஆசாராம் பாபு. 83 வயதான இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. அதேநேரம் ஜாமீன் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழலில் ஆசாராம் பாபு இருக்கிறார். இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு.. இவரது இயற்பெயர் அசுமல் சிறுமலானி ஹர்பலானி. தன்னைத்தானே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் இவர், பல இடங்களில் ஆசிரமங்களை நடத்தி வருகிறார்.

அதிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இவருக்கு ஏகப்பட்ட பக்தர்கள் இருக்கிறார்கள். அங்கு ஜோத்பூர் உள்படப் பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் கூட இவரைப் பார்க்க பக்தர்கள் வரத் தொடங்கினர்.
ஆசாராம் பாபு:
இந்தச் சூழலில் தான் கடந்த 2013ம் ஆண்டு இவர் மீது திடீரென பாலியல் புகார் எழுந்தது. அதாவது 2013ல் ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் வைத்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் 83 வயதான அசுமல் சிறுமலானி ஹர்பலானி கைது செய்யப்பட்டார். அதேபோல 2013ஆம் ஆண்டு குஜராத்தின் காந்திநகர் அருகே உள்ள ஆசிரமத்தில் மற்றொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகவும் அவர் கைதானார்.
சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே அவருக்குக் கடந்த மாதம் அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து கடந்த மாதம் பரோலில் வெளியே வந்தார். அவரது 15 நாள் பரோல் நிறைவடைந்த நிலையில், ஜன. 1ம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன்:
இதற்கிடையே ஆசாராம் பாபுவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அவருக்கு மார்ச் 31 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினர். ஆசாராமை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம் எங்குச் சிகிச்சை பெறலாம் என்பது குறித்து எந்தவொரு உத்தரவையும் நீதிபதி பிறப்பிக்கவில்லை.
வெளியே வர முடியாது:
ஜாமீன் கிடைத்துவிட்ட போதிலும் இப்போது அவரால் சிறையை விட்டு வெளியே வர முடியாத சூழல் இருக்கிறது. ஏனென்றால் மற்றொரு பலாத்கார வழக்கில் அவர் இடைக்கால ஜாமீன் பெற வேண்டியிருப்பதால், சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக உடல்நிலை பாதிப்பு காரணமாக ஆசாராமுக்கு கடந்தாண்டு புனே மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே வழக்கில் அவரது இரண்டு கூட்டாளிகளுக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது. அதேபோல காந்திநகர் ஆசிரமத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலும் அவர் 2023 ஜூன் மாதம் அவர் தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications