நிர்பயா வழக்கை விசாரித்தபோது.. மயங்கி சாய்ந்த நீதிபதி பானுமதி.. உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு
டெல்லி: நிர்பயா வழக்கு தொடர்பான விசாரணையின்போது உச்சநீதிமன்ற மூத்த பெண் நீதிபதி ஆர்.பானுமதி, மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடி சிகிச்சையை தொடர்ந்து அவர் உடல்நலம் தேறியது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக, இன்று உச்சநீதிமன்றத்தில், ஆர்.பானுமதி உள்ளிட்டோர் அடங்கிய 3 நீதிபதிகள் பெஞ்ச்சில் விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை நடைபெற்றபோது, திடீரென நீதிபதி பானுமதிக்கு கண்கள் மங்கின, மயக்கமான நிலைக்கு சென்றார். தனது இருக்கையிலேயே சற்று, மயக்கமுற்ற நிலையில் அமர் சில வினாடிகள் கண்ணை மூடியபடி அமர்ந்திருந்தார். இதையடுத்து கோர்ட்டில் பரபரப்பான சூழல் நிலவியது.
மருத்துவ ஊழியர்கள் நீதிமன்ற அறைக்கு வரவழைக்கப்பட்டனர். அதற்குள்ளாகவே, பானுமதி, இயல்பு நிலைக்கு திரும்பினார். இருப்பினும், அவர் சோர்வுற்று இருந்ததால், வீல்சேரில் வைத்து, சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னதாக, நிர்பயா வழக்கில் திங்கள்கிழமை வரை ஏன் காத்திருக்க கூடாது என நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். வேறு எந்த நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நிலுவையில் இல்லை. எனவே திங்கள்கிழமை வரை காத்திருக்கலாம், கீழமை நீதிமன்றம் என்ன கூறுகிறது என்பதை பார்த்து அடுத்தகட்ட உத்தரவை பிறப்பிக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
ஆனால் முழுமையான உத்தரவை பிறப்பிக்கும் முன்பாக நீதிபதி பானுமதி மயக்கமடைந்ததால், உத்தரவு தொடர்பாக பின்னர் அறிவிக்கிறோம் என கூறிய பிற இரு நீதிபதிகளும், வழக்கு விசாரணையை, அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். நீதிபதி மயக்கமடைந்த சம்பவம் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications