இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் குமரி தமிழகத்துடன் இணைந்திருக்காது- பொன்.ராதா
திருவனந்தபுரம்: தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் இந்து மகா சம்மேளனம் சார்பில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் சங்குமுகம் கடலில் நடந்தது. முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
இந்துக்களின் ஒற்றுமைக்கு அஸ்திவாரம் இட்டது கேரளா தான். மொழி அடிப்படையில், கேரளாவிடம் இருந்து பிரித்து கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்து சமூகம் ஒற்றுமையாக இருந்திருந்தால் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்காது.

கேரளாவின் வளர்ச்சிக்காக இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்ததை செய்வேன்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
கண்டனம்
அவரது இந்த பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ராச்குமார் பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராச்குமார் பழனிச்சாமி, தமிழகத்தின் இறையாண்மைக்கு எதிராக பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார். அவர் தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவார? அல்லது கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கபப்ட்டவரா? பொன். ராதாகிருஷ்ணன் இப்பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications