அசத்தல் ஆதித்யா எல் 1.. புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.. இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சி
ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. பி.எஸ்.எல்.வி சி. 57 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக தனியாக பிரிந்து புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து கொண்டு திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. 11.50 மணிக்கு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட்டில் இருந்து சரியாக ஒரு மணி நேரத்தில் ஆதித்யா எல். 1 விண்கலம் தனியாக பிரிந்தது. இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பூமியில் இருந்து சரியாக 648 கிலோ மீட்டர் உயரத்தில் ஆதித்யா விண்கலம் பிரிந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஆதித்யா விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். அடுத்தடுத்த சுற்றுகளைக் கடந்த மிக நீண்ட பயணத்திற்குப் பிறகு எல். 1 புள்ளியை அடையும் என்றும் சோம்நாத் கூறினார்.
பூமியில் இருந்து 15 கோடி கிமீ., தூரத் தொலைவில் சூரியன் இருக்கிறது. விண்ணில் பயணத்தை தொடங்கியுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் "லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்" என்ற இடத்தில் நிலைநிறுத்தப்படும். புவியின் நீள்சுற்றுவட்டப் பாதையில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்ற பகுதிக்கு செலுத்தப்பட்டு அங்கிருந்து சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும். இன்று விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 125 நாட்கள் பயணித்து அதாவது சுமார் 4 மாதங்கள் பயணித்து எல் 1 புள்ளியை சென்றடையும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications