போலீஸ் நடந்துகிறதே சரியில்லையே.. இடதுசாரி சிந்தனையாளர்கள் கைதில் சந்தேகம் கிளப்பும் நீதிபதி
டெல்லி: இடதுசாரி சிந்தனையாளர்கள் ஐந்து பேர் கைது விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு நிராகரித்துள்ளது. ஆனால், அதில் நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.
பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக, இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். உபா சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.

உச்சநீதிமன்றம் தலையிட்டு போலீஸ் காவலில் இவர்களை விசாரிக்காமல் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், எனவே சிறப்பு விசாரணை குழுவை கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும், ரோமிலா தாப்பர் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில், இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

சந்திரசூட் கூறியதாவது: மனுதாரர் எந்த ஒரு அரசியல் லாபத்திற்காகவும் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை. மகாராஷ்டிரா காவல்துறை இந்த விவகாரத்தில் செயல்படும் விதம் என்பது மிகுந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஐந்து பேர் கைது செய்யப்பட்டது, விசாரணைக்கு உகந்ததுதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தலாம். மாறுபட்ட கருத்தை கூறுவதாலேயே எதிர்தரப்பு குரலை ஒடுக்கக் கூடாது. சுதந்திரம் என்பது நிவர்த்தி செய்யப்பட முடியாத ஒன்று. இந்த வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை காவல்துறை மீடியாக்களுக்கு கசிய விடுகிறது.
இதன் மூலமாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்க, காவல்துறை முயற்சி செய்வதாக சந்தேகிக்கிறேன்.
கைது செய்யப்பட்டுள்ள சுதா பரத்வாஜ் எழுதியதாக கூறப்படும் கடிதம் மீடியாக்களில் ஒளிபரப்பப்படுகிறது. காவல்துறை தேர்ந்தெடுத்து சில ஆவணங்களை மட்டும் மீடியாக்களுக்கு கசிய விடுகிறது. இதன் மூலமாக நியாயமான விசாரணை நடக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications