மனைவிக்கு மருந்து வாங்க 2 மாதக் குழந்தையை ரூ.700, 50 கிலோ அரிசிக்கு விற்ற பாவப்பட்ட அப்பா!
புவனேஸ்வர்: புவனேஸ்வரில் மனைவிக்கு மருந்து வாங்க வழியறியாத ஒரு குடும்பத்தலைவன் தங்களது 2 மாத ஆண் குழந்தையை 700 ரூபாய் ரொக்கப் பணத்துக்கும், 50 கிலோ அரிசிக்கும் விற்ற கொடுமை சமூக ஆர்வலர்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகுரா முதுலி. இவரது மனைவி துமுசி முதுலி. சமீப காலமாக நோய்வாய்ப்பட்ட மனைவியின் மருத்துவ செலவுகளை சமாளிக்க வழியறியாத இவர் தங்களது 2 மாத ஆண் குழந்தையை 700 ரூபாய் ரொக்கப் பணத்துக்கும், 50 கிலோ அரிசிக்கும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் விற்றுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட குழந்தைகள் நல வாரிய தலைவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில் மேற்கண்ட தம்பதியருக்கு வறுமை ஒழிப்பு திட்டம், இந்திரா அவாஸ் யோஜனா திட்டம், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட மத்திய, மாநில அரசின் எவ்வித உதவியும் கிடைத்ததில்லை என தெரியவந்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சுகுரா முதுலி-துமுசி முதுலி தம்பதியருக்கு இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ஒரு வீடும், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் இதர சிறப்பு சலுகைகளும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தற்போதைய நிலையில், இவர்களால் குழந்தையை சரியாக வளர்த்து பராமரிக்க முடியாது என்பதால் தொண்டு நிறுவனத்திலேயே சில காலம் அந்த ஆண் குழந்தை வளரலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே ஒடிஷாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வறுமைக்காக குழந்தைகளை ரூ10-க்கும் ரூ20-க்கும் விற்பனை செய்த கொடுமை அரங்கேறி இந்தியாவை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications