எதிரி நாடுகளின் கள்ள நோட்டு தாக்குதலை முறியடிக்கவே இந்த அறிவிப்பு.. பாரிக்கர் பாராட்டு
இந்திய பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் நோக்கத்தில் ஆயிரக்கணக்கான கோடி கள்ள ரூபாய் நோட்டுக்களை எதிரி நாடுகள் புழக்கத்தில் விட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர
பானஜி: ஆயிரக்கணக்கான கோடி கள்ள ரூபாய் நோட்டுக்களை எல்லையில் இருந்து புழக்கத்தில்விட்டு, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை சீர்குலைத்து இந்திய பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்ய எதிரிநாடுகள் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்புப் பணம், ஊழல் சொத்து, பயங்கரவாத நிதி, போதை மருந்து பணம் ஆகிய நான்கு அசுரர்களை ஒழிக்கும் நோக்குடன் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். இந்த அதிர்ச்சித் தகவல் எதிரி நாடுகளை ஆட்டம் காணச் செய்துள்ளது.

மேலும், கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் செய்வதறியாது கண் விழி பிதுங்கியுள்ளனர். இந்நிலையில் எதிரிநாடுகள் காஷ்மீர் மாநிலம், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைகளில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலையச் செய்யும் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பாரிக்கர் கூறினார்.
பானஜியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திவ்யம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பாரிக்கர் மேலும் கூறியதாவது:
எதிரி நாடுகள் காஷ்மீரில் சிறிய சிறிய தாக்குதல் நடத்தி மக்களை கொன்று வருவதுடன் நின்றுவிடாமல் இந்திய பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளதாக பாரிக்கர் கடுமையாக குற்றஞ்சாட்டினார். கருப்புப் பணம், பயங்கரவாத நிதி, ஊழல் சொத்து, போதை மருந்து பணம் ஆகிய நான்கு அசுரர்களுமே நாட்டை சீர்குலைத்து வருவதாகவும் அவர் குறை கூறினார். இவையே காஷ்மீர் தாக்குதல் வடமாநில நக்சலைட் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு காரணமாக இருப்பதாகவும அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் கள்ள நோட்டுக்களை இந்தியாவில் புழக்கத்தில் விடுவது புதிது அல்ல, ஆனால், கடந்த 8 -ம் தேதி நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த உடன் அந்த கள்ள நோட்டுக்கள் எங்கு சென்றன எனத் தெரியவில்லை. அவைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன என்றார் அமைச்சர் பாரிக்கர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications