இமாச்சலில் பாஜக- காங்கிரசுக்கு ஷாக் கொடுத்த அதிருப்தி வேட்பாளர்கள்.. 4 தொகுதிகளில் லீடிங்!
சிம்லா: இமாசல பிரதேசத்தில் பாஜக சீட் கொடுக்காத அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட்ட 3 பேர் முன்னிலை வகித்து வருகின்றனர். அதேபோல், காங்கிரஸ் மீதான அதிருப்தியால் சுயேட்சையாக போட்டியிட்ட ஒருவரும் முன்னிலையில் உள்ளார்.
68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம்.
தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் இமாசல பிரதேசத்தில் இந்த முறையும் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறின.

மாறி மாறி முன்னிலை
காங்கிரஸ் கட்சி டஃப் பைட் கொடுக்கும் என்று கருத்துக்கணிப்புகள் சில கூறியிருந்தன. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இமாசல பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது. ஏனெனில் பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. காலை 10 மணி நிலவரப்படி பாஜக 32 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 33 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அதிருப்தி வேட்பாளர்கள் முன்னிலை
டி 20 போட்டியின் கடைசி 5 ஓவர்கள் போல முன்னிலை நிலவரங்கள் மாறிக்கொண்டு இருப்பது பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினருக்கும் டென்ஷனை எகிர வைத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. சுயேச்சையாக போட்டியிட்ட 4 பேர் முன்னிலை வகித்து வருகின்றனர். இதில், 3 பேர் பாஜக சீட் கொடுக்காத அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆவர்.

ஆட்சி அமைக்க ஆதரவு தேவையா?
நலகர் தொகுதியில் போட்டியிட பாஜக அதிருப்தியாளர் கேஎல் தாகூரும், தேரா தொகுதியில் பாஜக அதிருப்தி வேட்பாளர் ஹோஷியார் சிங்கும் முன்னிலை வகிக்கின்றனர். அதோபோல், காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்காததால் சுயேட்சையாக போட்டியிட்ட ஆஷிஷ் குமாரும் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்த 4 பேரும் முன்னிலை வகிப்பது காங்கிரஸ் - பாஜக என இரு கட்சிகளுக்கும் ஆட்சி அமைப்பதில் பெரும் தாக்கத்தை கொடுக்கும் என்றே தெரிகிறது. ஏனென்றால் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெற முடியாவிட்டால் இவர்களின் ஆதரவு ஆட்சி அமைக்க கண்டிப்பாக தேவைப்படும்.

வெற்றியாக மாறுமா?
இதனால், தற்போது முன்னிலை வகித்து வரும் 4 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களுக்கு மவுசு கூடும் என்று தெரிகிறது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பெரும்பான்மை பெறாவிட்டால் இவர்கள் யாருக்கு ஆதரவை பெற்றே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வரும். அப்போது அதிருப்தி அடைந்து சுயேட்சையாக போட்டியிட்டு இருக்கும் இந்த வேட்பாளர்கள் பெரும் டிமாண்ட் வைக்கவும் வாய்ப்பாக அமையும். ஆனால் இந்த முன்னிலை கடைசி வரை நீடித்து வெற்றியாக மாறுமா? என்பதை இன்னும் பார்க்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகும். அதன்பிறகே இறுதி முடிவு தெரியவரும்
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications