Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்தில் மதரீதியாக பேசி வாக்கு கேட்டதாக சர்ச்சை.. பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷனில் மம்தா புகார்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: சமீபத்தில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. பிரதமரின் பேச்சு மதம் சார்ந்து இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. எனவே தேர்தல் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார். கடந்த 30 நாட்களில் 6 முறைக்கு மேல் அவர் தமிழகம் வந்திருக்கிறார்.

TMC complains to Election Commission that PM Modi used religious speech to collect votes

இந்நிலையில் சமீபத்தில் சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது பல்வேறு விமர்சனங்களை கிளப்பி வருகிறது. குறிப்பாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பிரதமர் மதம் குறித்து பேசி ஓட்டு கேட்டிருந்ததாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

சேலத்தில் பிரதமர் பேசியதாவது: "இந்து மதத்தினர் நம்பிக்கை வைத்துவழிபட்டு வரும் சக்தியை அழிக்க வேண்டும்'' என்கின்றனர். தமிழக மக்கள் ஓம் சக்தியாக, மகா மாரியம்மனை வழிபடுகின்றனர். தமிழகத்தில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என சக்தி ஆலயங்கள் உள்ளன. சக்தியை பெண் உருவில் நாம் வணங்குகிறோம். இத்தகு சக்தியை வீழ்த்துவோம் என்று கூறுவதை அனுமதிக்க முடியாது. இந்து தர்மத்தின் வழிபாடான சக்தியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள்" என்று பேசியிருந்தார்.

முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, தேர்தல் பிரசாரங்கள் குறித்தும் தலைமை தேர்தல் ஆணையர் தெளிவாக விளக்கியிருந்தார். அதன்படி, மதத்தின் பெயரில் வாக்குகள் சேகரிக்க கூடாது என்று கூறியிருந்தார். ஆனால் பிரதமர் மதம் குறித்து பேசியிருக்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்திருக்கிறது.

இந்த புகாரில், "சேலத்தில் மோடி பேசியது மேற்கு வங்கம் உட்பல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒளிபரப்பாகியது. அதில். 'இந்தியா கூட்டணி மீண்டும் மீண்டும் இந்து மதத்தை அவமதிக்கிறது. அவர்கள் இந்து மதத்திற்கு எதிரான எண்ணங்களை விதைக்கிறார்கள். பிற மதங்களுக்கு எதிராக பேசுவதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு நொடி கூட வீணடிக்காமல் இந்து மதத்தை அவமதிக்கிறார்கள். இதை எப்படி பொறுத்துக் கொள்வது? இதை எப்படி அனுமதிப்பது?' என்று பேசியிருந்தார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 123 (3)ன் கீழ், மதத்தின் அடிப்படையில் தேர்தல்களின் போது வாக்குகளைக் சேகரிப்பது ஒரு 'ஊழல் நடைமுறை' என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே நரேந்திர மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+