காவிரி வாரியம் கோரி தமிழக எம்பிகள் அமளி... ராஜ்யசபா 3 முறை ஒத்திவைப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.கள் ராஜ்யசபாவில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சபை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி : மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக அதிமுக மற்றும் திமுக எம்பிகள் ராஜ்யசபா தலைவர் இருக்கை அருகே சென்று முழக்கமிட்டதால் சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே காவிரி, ஆந்திர சிறப்பு அந்தஸ்து, சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது முதலே ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத விஷயங்களை கண்டித்து தமிழகம் மற்றும் ஆந்திர எம்.பி.கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 20 நாட்களைக் கடந்து நாடாளுமன்ற செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் தலைவர் வெங்கய்ய நாயுடு இருக்கையை முற்றுகையிட்டு அதிமுக, திமுக எம்பிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். மற்றொரு புறம் தெலுங்குதேசம் எம்.பி.கள் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். தமிழகம், ஆந்திர எம்.பி.களின் தொடர் முழக்கத்தால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடைய பிற்பகல் 2 மணிக்கு சபை மீண்டும் கூடிய போது எம்பிகளின் அமளி நீடித்ததால் மீண்டும் பிற்பகல் 2.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கும் சபை கூடிய போது எம்பிகள் மையமண்டபத்திற்கு வந்து முழக்கமிட்டதால் ராஜ்யசபா மீண்டும் 3.15 வரை ஒத்திவைக்கப்பட்டது.
எம்பிகள் சபையை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் எம்பி குலாம் நபி ஆசாத், ராஜ்யசபாவில் காவிரி, ஆந்திர சிறப்பு அந்தஸ்து, சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மத்திய அரசு இந்த விவாதங்களை மறுப்பதாலேயே எம்பிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications