அரிசி, பருப்பைவிட குறைந்த விலையில் கிடைக்கும் குட்கா, பான்: ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியாவில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களைவிட புகையிலை தயாரிப்புகள் மிகவும் குறைவான விலையில் கிடைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சிக்கான ஆய்வு மையம் மற்றும் இந்திய பொது சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின்படி, "தற்போது உள்ள கலால் வரி மற்றும் வாட் வரி விதிப்பு முறைகள் புகையிலை பொருட்களுக்கான வரியை உயர்த்துவதற்கு போதுமானதாக இல்லாததால் அவற்றை உற்பத்தி செய்வது எளிமையாக உள்ளது.
சர்வதேச சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளின் படி இந்திய அரசு புகையிலை பொருட்களுக்கு வரி விதிப்பு செய்யவில்லை. விற்பனை விலையில் இருந்து கலால் வரி அதிகபட்சம் 70 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதே அந்த பரிந்துரை.
கடந்த சில காலங்களில் புகையிலை பொருட்களுக்கான வரிச்சுமையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில வருடங்களை தவிர்த்து பொதுவாகவே தேசிய அளவில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாகவும் புகையிலை உற்பத்தி திகழ்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications