நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று முக்கியமான நாள்.. நாடே நம்மை பார்க்கிறது.. பிரதமர் மோடி!
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று முக்கியமான நாள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று முக்கியமான நாள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முதல் முறையாக எதிர்கொள்கிறது.
இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசுக்கு தேவையான வாக்குகள் இருப்பதால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
எதிர்க்கட்சிகள் திட்டம்
ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை பயன்படுத்தி மத்திய அரசை கடுமையாக விமர்சிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
|
முக்கியமான நாள்
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, நாடாளுமன்றத்திற்கு இன்று முக்கியமான நாள்.
நாடே கவனிக்கிறது
ஆக்கப்பூர்வமாகவும், விரிவாகவும், அமளியின்றி விவாதம் நடைபெறும் என நம்புகிறேன். நாடே நம்மை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடி டிவிட்
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்னும் சற்றுநேரத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு டிவிட்டியுள்ளார்.