பர்கூரில் கழிவறையை பெருக்கிய மாணவர்கள் - நடிக்க வைத்த ஆசிரியர் இடைநீக்கம்
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியை அடுத்த பர்கூரில் உள்ள கழிவறைகளை பெருக்க வைத்த சர்ச்சையில் சிக்கிய ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் 284 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ் அப் குழுக்களில் ஒரு காணொளி பகிரப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பள்ளியில் தமிழ் பாட முதுகலை ஆசிரியர் அனுமுத்துராஜ், தலைமை ஆசிரியருக்கு அவப்பெயரை ஏற்படுத்த இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.
காணொளி பதிவு செய்யப்பட்ட நாளில், பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்க கூடிய இரண்டு மாணவர்களை அழைத்து கழிவறையை சுத்தம் செய்வது போல துடைப்பத்தால் பெருக்கும்படி ஆசிரியர் அனுமத்துராஜ் கூறியிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் பெருக்கும் காட்சியை தமது செல்போனில் அனுமுத்துராஜ் பதிவு செய்தார். அந்த காணொளி சில வாட்ஸ் அப் குழுக்களில் பரவலாக பரவி வந்தது.
இந்த விடியோ குறித்த விசாரணையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்திமதிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த செயலில் அனுமுத்துராஜ் ஈடுபட்டதாக தெரிய வந்தது.
- பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எப்படி உருவானது? இதன் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
- மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்ததாக சொல்லும் ஜே.பி நட்டா - உண்மை என்ன?
இது குறித்து மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை கொடுத்த நேரடி விசாரணையின் அடிப்படையில், ஆசிரியர் அனுமுத்துராஜை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜ், தவறான செயலில் ஈடுபட்டு பள்ளிக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தனர்.
நடவடிக்கைக்கு உள்ளான அனுமுத்துராஜ், திருப்பத்தூர் மாவட்டம் மண்டல நாயனகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தலைமை ஆசிரியருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக உடன் பணிபுரியும் ஆசிரியர், மாணவர்களை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து வீடியோ எடுத்து வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பிய விவகாரம் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
https://www.youtube.com/watch?v=jGfM1PY1B1U
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி













Click it and Unblock the Notifications