ஹிமாச்சலில் குவியும் பயணிகள்...கொரோனா அலை ஓயவில்லை விதிமுறைகளை பின்பற்றுங்கள் - முதல்வர் வேண்டுகோள்
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்து வருவதால் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
சிம்லா: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். கொரோனா அலை ஓயவில்லை என்பதால் பயணிகள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைவாசஸ்தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் பலரும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், சுற்றுலா பயணிகள் வரவேற்கப்படுகிறார்கள் என்றாலும் மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறித்து கவலைப்படுவதாக கூறினார்.
சுற்றுலாத்துறையை பாதுகாக்க வேண்டும் அதே நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. கோவிட் 19 அலை ஓயவில்லை எனவே கூட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளேன்.
பல மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதால் சுற்றுலா பயணிகள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ளால் சுற்றுலா பயணிகள் ஹரித்துவார் உள்ளிட்ட பகுதிகளுக்கும், சிம்லா, மணாலி போன்ற தலங்களுக்கும் வரத் தொடங்கியுள்ளனர்.
கொரோனா விதிமுறைகளை மீறி ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தோம் தற்போதுதான் விடுதலை பெற்றுள்ளது போல உணர்கிறோம் என்று சுற்றலா பயணிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மூன்றாவது அலைக்கு முன்பு சுற்றி பார்த்து விட வேண்டும் என்று வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார் ஹரித்வார் நகர காவல்துறை அதிகாரி அபய் சிங்.
ஹோட்டல் மற்றும் வன்ஷாலா தொழிற்சங்கங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம். எல்லோரும் ஹர் கி பவுரியைப் பார்க்க விரும்புகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குப் பிறகு, மீதமுள்ள பயணிகளை காட்டிற்கு செல்ல வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் திரு சிங் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வரும் பயணிகள் கொரோனா விதிமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள் என்று ஹிமாச்சல் பிரதேச அரசு வேண்டுகோள் வைத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications