திரிபுரா முதல்வர் மாணிக் சாகா வெற்றி.. ஜஸ்ட் மிஸ்.. அடுத்தடுத்து நடத்த திருப்பங்கள்
திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக போகின்றன. அம்மாநில முதல்வர் மாணிக் சாகா போர்ட்வால் தொகுதியில் வெற்றி பெற்றார்.
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக போகின்றன. அம்மாநில முதல்வர் மாணிக் சாகா போர்ட்வால் தொகுதியில் வெற்றி பெற்றார்.
திரிபுரா முதல்வர் மானிக் சஹா காங்கிரஸின் ஆஸிஷ் குமாரை தோற்கடித்து போர்டோவலி தொகுதியிலிருந்து வென்றுள்ளார். முதல்வர மாணிக் சஹா காங்கிரஸ் வேட்பாளரை 800 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
முன்னதாக தேர்தலை மனதில் வைத்து திரிபுரா முதல்வராக இருந்த பிப்லாப் டெப் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் கடந்த ஆண்டு மாணிக் சாகா திரிபுரா முதல்வராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து திரிபுரா தேர்தல் கடந்த 16ம் தேதி நடந்தது. இதில் திரிபுராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 55 தொகுதிகளிலும், ஐ.பி.எஃப்.டி 5 தொகுதிகளிலும் களம் இறங்கின.

காங்கிரஸ் கட்சி
இடது முன்னணி-காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. திரிபுரா மன்னர் பரம்பரையைச் சேர்ந்த தேபர்மாவின் திப்ரா மோத்தா கட்சி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 42 தொகுதிகளில் போட்டியிட்டது. இது தவிர மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலில் களம் இறங்கின.

முன்னணி
இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 32 இடங்களில் வென்றுள்ளது. திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடத்திலும் வென்றுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை இடமான 31 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பாஜக தக்கவைத்துள்ளது.

மாணிக் சாகா
இதனிடையே திரிபுரா சட்டசபைக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட போது, மாணிக் சாகா திரிபுரா சுந்தரி மா கோயிலுக்கு சென்று பக்தியுடன் வழிப்பட்டார் அவருடன் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ராவும் இருந்தார். இந்நிலையில் முதல்வர் மானிக் சஹா காங்கிரஸின் ஆஸிஷ் குமாரை தோற்கடித்து போர்டோவலி தொகுதியில் வென்றுள்ளார். முதல்வர் மாணிக் சாகா காங்கிரஸ் வேட்பாளரை 800 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

கோரிக்கை ஏற்பு
திப்ரா மோத்தா கட்சி இந்த தேர்தலில் 13 இடங்களில் வென்ற நிலையில் திப்ரா மோத்தாவின் தனிமாநில கோரிக்கையை தவிர அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கத் தயாராக உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. திரிபுரா பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் சுப்ரபோர்டி இந்த தகவலை தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications