திருப்பதி திவ்ய தரிசனம்... நாளொன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
திருமலை: திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பயன்படுத்தி வரும் மலை பாதை பக்தர்கள் தரிசனம் எனப்படும் திவ்ய தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேவஸ்தானம்.
திருப்பதியில் தற்போது விஐபி தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம் (தேவஸ்தான மையங்களில் மட்டுமே கிடைக்கும்), ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய வகைகளில் ஏழுமலையானை மக்கள் தரிசித்து வருகின்றனர். இவற்றுள் சாதாரண மக்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய மலைபாதை எனப்படும் திவ்ய தரிசனத்தையே விரும்புகின்றனர்.
திவ்ய தரிசனம் என்பது மலை பாதை வழியாக நடந்தே சென்று சுவாமியை தரிசிப்பதாகும். இதில் இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி வழியாக திருமலை சென்றடைவது, மற்றொன்று ஸ்ரீ வாரி மெட்டு வழியாக செல்வதாகும். இதில் அலிபிரி என்பது 3550 படிக்கட்டுகளை கொண்டது. இங்கிருந்து மேலே செல்ல 11 கி.மீ. தூரம் ஆகும். மற்றொன்று, திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 19 கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாரி மெட்டு. 3 கி.மீ. தூரம் கொண்ட ஸ்ரீ வாரி மெட்டில் வழியாக திருமலை செல்ல 2384 படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன.

நேரம் மிகவும் குறைவு
சுவாமியை தரிசனம் செய்ய காத்திருக்கும் நேரம் மிகவும் குறைவு என்பதால் பாதயாத்திரையாக திருப்பதியை ஏராளமான பக்தர்கள் சென்றடைகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 10,000 பக்தர்கள் வந்த நிலையில், தற்போது பக்தர்களின் எண்ணிக்கை 45,000-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்தில் பக்தர்களின் காத்திருப்பு நேரம் அதிகரிக்கிறது.

தரிசனத்துக்கு அனுமதி
கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாததால் இனி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் திவ்ய தரிசனத்தை கடந்த 7-ஆம் தேதி முதல் ரத்து செய்தது. இந்நிலையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களில் 20,000 பேரை மட்டுமே திவ்ய தரிசனத்திற்கு அனுமதிப்பது என கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

17 முதல் அமல்
பாதயாத்திரையாக வந்தாலும் 20 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளவர்கள் பொது தரிசனத்தில் அனுமதிக்கப்படுவர் என்றும் இந்த முறை வரும் 17-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

பக்தர்கள் அதிருப்தி
மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களையும் பொது தரிசன பக்தர்கள் வழியில் அனுமதிக்கப்பட்டால், பெருமாளை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காத்துக் கிடப்பது இன்னும் அதிகமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க நேரிடும் என பக்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் விஐபி தரிசனத்தை குறைத்து, பொது தரிசன நேரத்தை அதிகரிக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications