டிடிவி ஜெயிலுக்கு போயி ஒரு மாசம் போயிடுச்சு..ஜாமீன் மனு மீதான விசாரணை மே 29க்கு ஒத்திவைப்பு!
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனின் ஜாமீன் மனு விசாரணை மே 29க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற புரோக்கர் மூலம் லஞ்சம் தரை முயன்ற வழக்கில் சிறையில் உள்ள டிடிவி தினகரன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுகவின் இரு கோஷ்டிகளும் உரிமை கோரியதால் அதிமுக கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்த துணைப் பொதுச்செயலாளர் இடைத்தரகர் ஒருவர் மூலம் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் பெற முயன்றதாக புகார் எழுந்தது.

டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதத்தில புரோக்கர் சுகேஷ் என்பவர் கைது சுமார் ரூ.1.30 கோடி பணத்துடன் சிக்கினார். இவர் அளித்த தகவலின்படி இரட்டை இலை சின்னத்திற்காக டிடிவி தினகரன் சுமார் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டெல்லி போலீஸ் தினகரனுக்கு சம்மன் அளித்தது. இதையடுத்து நான்கு நாட்கள் ஏறத்தாழ 37 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜாமீன் கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனு டெல்லி திஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி போலீஸ் தரப்பு அதிகாரி விசாரணைக்கு ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைக்க நீதிபதி பூனம் சவுத்ரியிடம் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி தினகரன், மல்லிகார்ஜூனா ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications