ஹபீஸ் சயீத்துடன் சந்திப்பு: வைதிக் மீது தேசத் துரோக வழக்குகள்!!
Subscribe to Oneindia Tamil

யோகா குரு பாபா ராம்தேவின் நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான வைதிக், லாகூரில் ஹபீஸ் சயீத்தை சந்தித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து தொடர்கிறது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நீதிமன்றத்தில் தேசத் துரோக பிரிவான 124ஏ மற்றும் 132ன் கீழ் வைதிக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதேபோல் வாரணாசியிலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை சந்திததன் மூலம், வைதிக் தேச துரோகக் குற்றம் புரிந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications