அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்.. நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
2003ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் முடிவுக்கு வந்த நிலையில், 2004ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிக்கு பங்களிப்பு செய்வார்கள். அதில் இருந்து தான் ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்படும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலும் இதே பாணி பின்பற்றப்பட்டாலும், இதில் அரசு ஊழியர்களின் சேவை காலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவிகித ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது.
அதேபோல் 10 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும். அதேபோல் ஓய்வு பெற்ற ஊழியர் மறைந்துவிட்டால், அவரின் அதிகாரப்பூர்வ கணவன்/மனைவி-க்கு 60 சதவிகிதம் ஓய்வூதியம் கிடைக்கும். அதேபோல் ஊழியர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் பணியை ராஜினாமா செய்துவிட்டு சென்றால், பனிக்கொடையுடன் கூடிய குறிப்பிட்ட அளவிற்கான ரொக்கம் கிடைக்கும். அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. அதேபோல், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்த அரசு ஊழியர்கள், கடைசி 12 மாதங்கள் பெற்ற சராசரி ஊதியத்தின் அடிப்படையில் 50 சதவிகிதம் அளவிற்கு ஓய்வூதியம் அளிக்கப்படும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ற இரு வாய்ப்புகள் அளிக்கப்படும். அந்த வாய்ப்பில், ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒருமுறை தேர்வு செய்த பின்னர், அதனை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications