Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்.. நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.

2003ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் முடிவுக்கு வந்த நிலையில், 2004ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ups nps government employees

புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், ஓய்வூதிய நிதிக்கு பங்களிப்பு செய்வார்கள். அதில் இருந்து தான் ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்படும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலும் இதே பாணி பின்பற்றப்பட்டாலும், இதில் அரசு ஊழியர்களின் சேவை காலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக குறைந்தபட்சம் 50 சதவிகித ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது.

அதேபோல் 10 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும். அதேபோல் ஓய்வு பெற்ற ஊழியர் மறைந்துவிட்டால், அவரின் அதிகாரப்பூர்வ கணவன்/மனைவி-க்கு 60 சதவிகிதம் ஓய்வூதியம் கிடைக்கும். அதேபோல் ஊழியர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் பணியை ராஜினாமா செய்துவிட்டு சென்றால், பனிக்கொடையுடன் கூடிய குறிப்பிட்ட அளவிற்கான ரொக்கம் கிடைக்கும். அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. அதேபோல், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்த அரசு ஊழியர்கள், கடைசி 12 மாதங்கள் பெற்ற சராசரி ஊதியத்தின் அடிப்படையில் 50 சதவிகிதம் அளவிற்கு ஓய்வூதியம் அளிக்கப்படும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ற இரு வாய்ப்புகள் அளிக்கப்படும். அந்த வாய்ப்பில், ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒருமுறை தேர்வு செய்த பின்னர், அதனை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+