லோன் கிடைக்கவில்லை.. பக்கோடா கடை திறக்க உதவுங்கள்.. ஸ்மிரிதி இராணிக்கு இளைஞர் கடிதம்!
பக்கோடா கடை திறக்க உதவுங்கள் என்று கூறி ஸ்மிரிதி இராணிக்கு இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி இருக்கிறார்.
Recommended Video

லக்னோ: சில நாள் முன்பு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய பிரதமர் மோடி ''200 ரூபாய் வருமானம் கிடைக்கும் வகையில் பக்கோடா விற்பதும் கூட வேலைவாய்ப்புதான்'' என்றார். அது மிகவும் வைரல் ஆனது.
இதே கருத்தை பாஜக தலைவர் அமித் ஷாவும் சொல்லி இருந்தார். தற்போது இது பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் லக்னோவை சேர்ந்த அஷ்வின் மிஸ்ரா என்ற இளைஞர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் பக்கோடா கடை திறக்க உதவுமாறு கேட்டு உள்ளார்.

திறக்க வேண்டும்
அந்தக் கடிதத்தில் அவர் ''என்னுடைய வேலை தேடும் படலம் இதோடு முடிந்தது. பிரதமரின் பேச்சை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இனி நானே பக்கோடா கடை திறக்கப் போகிறேன். இதன் மூலம் நான் பிறருக்கும் வேலைக் கொடுப்பேன். மோடி சிறப்பாக பேசி இருக்கிறார்.'' என்றுள்ளார்.

சம்பளம்
மேலும் ''வேலை இல்லாமல் இருப்பதற்குப் பக்கோடா விற்பது நல்லது என்றுள்ளார். தினமும் 200 ரூபாய்க்கு அதிகமாகக் கிடைக்கும் என்றுள்ளார். அதனால் நானே இந்த வேலையைச் செய்ய போகிறேன். வேலை இல்லாமல் இருக்கும் என் நண்பர்களையும் செய்ய சொல்ல போகிறேன்'' என்றுள்ளார்.

லோன் இல்லை
அதேபோல் ''நான் இதற்காக லோன் கேட்க சென்றேன். கிட்டத்தட்ட எல்லா வங்கியிலும் லோன் கேட்டேன். ஆனால் அவர்கள் லோன் கொடுக்கவில்லை. இதற்கெல்லாம் லோன் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். உடனே எனக்கு மனம் உடைந்து விட்டது'' என்றுள்ளார்.

பிளீஸ் உதவுங்கள்
கடைசியாக ''அதன்பின்தான் பிரதம மந்திரியின் மக்கள் நல நிதி இருக்கும் விஷயம் தெரிந்தது. அதில் 10 கோடி மக்கள் நலனுக்காகக் கொடுக்கப்பட்டதாக மோடி பேசி இருந்தார். எனக்கு அதில் இருந்து கொஞ்சம் மட்டும் தொழில் தொடங்க உதவுங்கள். இதுகுறித்து நீங்கள் மோடியிடம் பேசுங்கள்'' என்று ஸ்மிரிதி இராணியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications