உ.பி.யில் 18 வயது பெண்ணை கடத்தி, சீரழித்து, கழுத்தை நெறித்துக் கொன்ற 3 வாலிபர்கள்
முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் மாயமான 18 வயது பெண் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவரை 3 பேர் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள பாசி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் கடந்த 13ம் தேதி திடீர் என மாயம் ஆனார். இதையடுத்து அவரது பெற்றோர் போலீசில் இது குறித்து புகார் அளித்தனர். இந்நிலையில் அவர் பாக்பாட் மாவட்டத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவரை ரெஹ்மானியின் மகன் அக்பர், ஆமீரின் மகன் அக்பர் மற்றும் இம்ரான் ஆகியோர் சேர்ந்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்துக் கொன்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications