எழுத்தாளர் அனந்தமூர்த்தி மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம், இன்று அரசு விடுமுறை
பெங்களூர்: எழுத்தாளர் யு.ஆர்.அனந்த மூர்த்தி மறைவையொட்டி கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் பாதியிலேயே வீடு திரும்பினர்.
ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி நேற்றிரவு காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் சித்தராமையா, பிரதமர் நரேந்திரமோடி, எடியூரப்பா, தேவகவுடா உள்ளிட்ட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவை பொறுத்தளவில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு சமூகத்தில் மிக உயரிய மதிப்பு அளிக்கப்படும். பொது மேடைகளில் முதல்வரை வைத்துக்கொண்டே எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் அரசை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்ய முடியும். சட்டையை பிடித்து இழுத்து கேட்காத குறையாக எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் தங்களது தார்மீக கோபத்தை முதல்வர், அமைச்சர்கள் மீது காட்ட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சம்பவங்களை உதாரணமாக கூற முடியும்.
இந்நிலையில், எழுத்தாளர் அனந்தமூர்த்தி மறைவையொட்டி, மாநில அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மூன்று நாட்களும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். மேலும், சனிக்கிழமையான இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையையொட்டி பெங்களூர், மைசூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. விடுமுறை அறிவிப்பு நேற்றிவு வெளியானதால் பல இடங்களில் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு கிளம்பினர், ஆனால் தொலைக்காட்சி, இணையதளங்கள் மூலமாக தகவலை அறிந்து கொண்டு வீடுகளில் முடங்கினர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications