For Daily Alerts
Just In
காஷ்மீர் ராணுவ முகாம் தாக்குதல் எதிரொலி.. படைப்பிரிவு தளபதி அதிரடி மாற்றம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது செப்டம்பர் 18ம் தேதி, நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், சம்பவ இடத்திலேயே 17 ராணுவ வீரர்களும், சிகிச்சை பலனளிக்காமல் 2 வீரர்களும் என இதுவரை 19 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக கருதும் பாதுகாப்பு அமைச்சகம், அந்த பிராந்தியத்தின், ராணுவ படைப்பிரிவு தளபதியான பிரிகேடியர் சோமசங்கரை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
யூரி தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணை முடியும் வரை அவரை அப்பதவியில் இருந்து மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்தாகக் கூறப்படுகிறது.
Comments
English summary
Weeks after the Uri terror attack, the brigade commander was shifted out. The commander will stay shifted out until the investigation which is currently underway is concluded.
Story first published: Saturday, October 1, 2016, 13:37 [IST]